லாரிகளில் டன் கணக்கில் கடத்தல்.. நேரில் வந்த வட்டாட்சியர்.. போலீசுக்கு உத்தரவு

x

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் இருந்து மணல் அள்ளிச் சென்ற 3 லாரிகளை அதிகாரிகள் சிறைபிடித்தனர். பாண்டியன் நகர் அருகே மூன்று லாரிகளை தடுத்து நிறுத்திய மீன்வளத்துறை அதிகாரிகள், இது குறித்து திருப்பரங்குன்றம் வட்டாட்சியர், போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் கவிதா, லாரிகளை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று ஆவணங்களை சரி பார்த்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்