தகாத உறவில் ருசி கண்ட பெண்.. கணக்கே இல்லாத கள்ளக்காதலன்கள்.. வெறியில் தோழியுடன் செய்த காரியம்

x

மதுரை மாவட்டம் வாடிபட்டியை அடுத்துள்ள குட்லாடம்பட்டியை சேர்ந்த வள்ளி, வீட்டை விட்டு வெளியேறி உறவினரான ராஜாவுடன் செக்காணூரணி பகுதியில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். கட்டிட சித்தாள் வேலைக்கு செல்லும் போது வள்ளிக்கு செல்வம் என்ற கொத்தனாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில் வள்ளியின் வீட்டில் கொத்தனர் செல்வம் மர்மான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போது வள்ளி, தோழியுடன் இணைந்து செல்வத்தை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த வள்ளியையும், தோழியையும் போலீசார் கைது செய்தனர். பலருடன் தகாத உறவு வைத்திருந்ததை செல்வம் கண்டித்ததால் கொலை செய்ததாக வள்ளி போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதே செக்காணூரணி பகுதியில் தனது மனைவியுடன் தகாத தொடர்பில் இருந்த நபரை தட்டிக்கேட்ட கூலி தொழிலாளி சோனு பிரபாகரன் என்பவர் அண்மையில் குத்தி கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்