கணவன் வீட்டிற்குள் இறந்து கிடந்த கள்ளக்காதலன் - எஸ்கேப்பான காதலி .. மதுரையில் அதிர்ச்சி | Couples

x

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, கட்டட தொழிலாளி வீட்டில் இறந்து கிடந்த நிலையில், மாயமான காதலியை போலீசார் தேடி வருகின்றனர்.

கண்ணனூரைச் சேர்ந்த ராஜாவுக்கும், குட்லாடம்பட்டியைச் சேர்ந்த வள்ளிக்கும் தவறான உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, செக்காணூரணி பகுதியில் வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். வள்ளி கட்டட வேலைக்கும், ராஜா, டீக்கடைக்கும் வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில், கட்டட வேலைக்கு சென்ற வள்ளிக்கும், கீழப்பட்டியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி செல்வத்திற்கும் தவறான உறவு ஏற்பட்டுள்ளது. வீட்டில் ராஜா இல்லாத நேரத்தில், வள்ளியும் செல்வமும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில், இரவு பணிக்கு சென்றுவிட்டு, காலையில் ராஜா வீடு திரும்பியுள்ளார். அப்போது, கட்டட தொழிலாளி செல்வம் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த ராஜா அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், செல்வத்தின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார், மாயமான வள்ளியை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்