நள்ளிரவில் காலேஜ் ஹாஸ்டலில் அலறிய மாணவிகள் - மதுரையில் நடந்த அதிர்ச்சி

x

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் மர்ம நபர் நுழைந்ததால் மாணவிகள் கூச்சலிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. மது போதையில் இருந்த அந்த நபரை மாணவிகள் மற்றும் பாதுகாவலர்கள் துரத்தி பிடித்து நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஏற்கனவே அந்த நபர் இது போல் மூன்று முறை பெண்கள் விடுதிக்குள் நுழைந்ததை ஒப்புக்கொண்டிருந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் ஏதும் தெரிவிக்காததால் அந்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கல்லூரி மாணவிகள், பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியத்தால் தங்களது பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்