"சாப்பாட்டுகே காசு கொடுக்கல..." - கதறிய துணை நடிகர்கள்...

x

மதுரையில் சினிமா சூட்டிங் என அழைத்துச் சென்றுவிட்டு ஊதியம் தராமல் முகவர்கள் ஏமாற்றிவிட்டதாக, துணை நடிகர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

மதுரை ரயில் நிலையத்தில், இரவு நேரங்களில் தூங்கக்கூடிய 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை, மேலூர் மில்கேட் பகுதியைச் சேர்ந்த முகவர்கள் இருவர், ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் பகுதிக்கு திரைப்பட சூட்டிங்கிற்காக அழைத்துச் சென்றுள்ளனர். கடந்த 20 நாட்களாக தங்க வைத்து இரவு நேரத்தில் மட்டும் உணவு வழங்கி, அவர்களை நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பகல் நேரங்களில் ஆங்காங்கே கிடைக்க கூடிய உணவுகளை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சூட்டிங் முடிந்த பின்பு மதுரைக்கு அழைத்து வந்து ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டுள்ளனர். வெறும் 300 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டதாகவும், பசியோடு ரயில் நிலையத்திலேயே படுத்துக் கிடப்பதாகவும் துணை நடிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு நபர்களிடமிருந்து தலா 5 ஆயிரம் ரூபாய் வரை முகவர்கள் ஏமாற்றிவிட்டதாகவும் கூறுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்