அங்கன்வாடியில் குழந்தை முழங்காலில் சூடு வைத்து கொடுமைபடுத்திய உதவியாளர்-மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

x

அங்கன்வாடியில் குழந்தை முழங்காலில் சூடு வைத்து கொடுமைபடுத்திய உதவியாளர்-மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

அலங்காநல்லூர் இடையபட்டி கிராமத்தை சேர்ந்த தனசேகர், அங்கிருக்கும் அங்கன்வாடி மையத்தில் தனது இரண்டரை வயது குழந்தை ஷாத்மிகாவை சேர்த்துள்ளார். செவ்வாய்கிழமை குழந்தை அங்கன்வாடி மையத்திலிருந்து திரும்பியபோது, காலில் காயங்களோடு வந்துள்ளது. தீக்கொப்பளம் தென்பட்டிருக்கிறது. மறுநாள் அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக பணிபுரியும் புஷ்பம் என்பவரிடம் தனசேகரன் விசாரித்தபோது, புஷ்பம் குழந்தைக்கு சூடு வைத்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தனசேகர் அளித்த புகாரில், உரிய நடவடிக்கை எடுப்பதாக அலங்காநல்லூர் போலீசார் தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக உதவியாளராக பணிபுரியும் புஷ்பம், குழந்தைகள் அடிக்கடி அடிப்பதாகவும், அவரது உறவினர்கள் குழந்தைகளை மட்டும் நன்றாக கவனிப்பதாகவும் உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்