திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேக வழக்கு.. ஐகோர்ட் மறுப்பு

x

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி தடை விதிக்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமி கோயிலில், வரும் 12ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

இதற்கு தடை கோரி, மாயூரபுரம் குரு பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு தாஸ அன்னாதானம் சபையின் தலைவர் டி.சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், நீதிமன்ற உத்தரவுகளை மீறி, உண்மையான சபைகளை கண்டறியாமல் கும்பாபிஷேகம் நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கும்பாபிஷேகம் நடத்த எந்தத் தடையும் இல்லை என வழக்கை விசாரித்த நீதிபதி பவானி சுப்பராயன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கும்பாபிஷேகத்தின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மனுதாரர் தனது கோரிக்கை குறித்து, அறநிலையத் துறையிடம் மனு கொடுத்து, வரும் 24ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்