காதலனை பயமுறுத்த ரயில் தண்டவாளத்தில் குதித்த பெண் லிவ் இன் உறவு காதலன் மதுவுக்கு அடிமையானதால் ஆத்திரம்

x

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய இந்த சம்பவத்தில், 38 வயதான ராணி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். ராணிக்கு ஏற்கனவே திருமணமாகி 3 மகன்கள் உள்ள நிலையில், கணவரை பிரிந்த அவர் தன் காதலனுடன் லிவ் இன் உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. காதலன் அடிக்கடி மதுபோதையில் வீட்டிற்கு வந்ததால் ஆத்திரமடைந்த ராணி, ரயில் தண்டவாளத்தில் குதித்து காதலனை பயமுறுத்த முயன்றிருக்கிறார். இதில், காதலன் கண்முன்னே... அவர் கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் சிசிடிவி வெளியாகி மனதை பதற வைத்திருக்கும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.காதலனை பயமுறுத்த ரயில் தண்டவாளத்தில் குதித்த பெண்/லிவ் இன் உறவு காதலன் மதுவுக்கு அடிமையானதால் ஆத்திரம்


Next Story

மேலும் செய்திகள்