மாட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை.. சிறுத்தையை தேடும் பணி தீவிரம்

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மூக்கனூரில் வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டை சிறுத்தை அடித்து சாப்பிட்டுள்ளது. இதனையடுத்து மாட்டின் உரிமையாளர் சீனிவாசன் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த டேனிஸ்பேட்டை வனத்துறை அதிகாரிகள், வனப்பகுதி மற்றும் வயல்வெளியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர். சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், உடனடியாக சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்