ஷேர் மார்க்கெட்டில் ரூ. 1 கோடியை இழந்த இளைஞர் தற்கொலை

x

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னீர் குப்பத்தை சேர்ந்தவர் வினோத்குமார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், ஷேர் மார்க்கெட் மூலம் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து வந்திருக்கிறார். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் கடன் வாங்கி முதலீடு செய்தில், சுமார் ஒரு கோடி ரூபாய் வரையிலான பணத்தை வினோத்குமார் இழந்ததாக கூறப்படுகிறது. இதில், கடனை அடைக்க தன் சொத்துக்களை விற்ற வினோத்குமார், மேலும் நெருக்கடிக்கு ஆளானதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு வற்புறுத்தவே, மன உளைச்சலில் இருந்த வினோத்குமார், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்