சிறையில் இருந்து வெளியே வந்து கும்பகோணத்தை பரபரப்பாக்கிய பெண்

x

கும்பகோணத்தில் நீதிமன்ற வளாகம் முன் சாலையில் பெண் ஒருவர் மறியலில் ஈடுபட்டதால் ஏற்பட்டது. செந்தாமரை என்ற பெண், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் இருக்கும்போது ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு பணத்தை இழந்ததாகவும், அந்த பணத்தை மீட்டுத்தரக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அதே நீதிமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளியில் வந்த அவர், மீண்டும் நீதிமன்ற வாசலில் தனக்கு நீதி வேண்டும் எனக் கோரி மறியலில் ஈடுபட்டார். அவரை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்