பானிபூரி சாப்பிட்ட சிறுவனை ரவுண்டு போட்டு வெட்டிய மர்ம கும்பல்... அதிர்ச்சி சம்பவம்

x

கும்பகோணத்தில் 17 வயது சிறுவனை, மர்மநபர்கள் சிலர் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருபுவனத்தில் உள்ள பானிபூரி கடையில் 17 வயது சிறுவன் ஒருவன் பானிபூரி சாப்பிட்டு கொண்டிருந்தான். அவனை சூழ்ந்த மர்ம நபர்கள் சிலர், சிறுவனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் சிறுவனுக்கு, தலை, முதுகு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுவன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்