நாளை சூரசம்ஹாரம்.. லட்சக்கணக்கில் குவியும் மக்கள்.. தயாராகும் தென் தமிழகம்

x

மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நாளை நள்ளிரவில் விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், கோவில் கடற்கரையில் மின்விளக்குகள், கண்காணிப்பு கோபுரங்கள், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் 5கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் 4 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்