குலசை முத்தாரம்மன் கோயில் உண்டியலில் கொட்டிய பல கோடிகள்

x

குலசை முத்தாரம்மன் கோயில் உண்டியலில் கொட்டிய பல கோடிகள்

தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் 4 கோடியே 57 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 12-ஆம் தேதி நடந்தது.

அதைத் தொடர்ந்து, கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் நடந்து வந்தன. அதில், உண்டியல்கள் மூலம் 4 கோடியே 57 லட்சத்து 23 ஆயிரத்து 30 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதுதவிர, 115 கிராம் தங்கம், 2 ஆயிரத்து 689 வெள்ளி பொருட்களும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்