லீவுக்கு வீட்டுக்கு வந்து அண்ணியுடன் அத்துமீறிய தம்பி.. அண்ணன் கொடுத்த தண்டனை - வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் உடுங்கல் போடூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். பெங்களூரில் பணிபுரிந்து வந்த இவர், விடுமுறையின் போது அவ்வப்போது சொந்த ஊர் வந்து செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஊருக்கு வந்த வெங்கடேஷ், தன் அண்ணன் மாதேஷின் மனைவியை அவர் தனிமையில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக சொல்லப்படுகிறது. இது குறித்து மாதேஷிடம் அவரது மனைவி தெரிவித்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த மாதேஷ், தன் தம்பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை கத்தியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து, அருகிலுள்ள குருப்பரபள்ளி காவல்நிலையத்தில் மாதேஷ் சரணடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலம், அண்ணனும் தம்பியும் இதற்கு முன் நிலத்தகராறில் மோதி வந்தது தெரியவர, கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லீவுக்கு வீட்டுக்கு வந்து அண்ணியுடன் அத்துமீறிய தம்பி.. அண்ணன் கொடுத்த தண்டனை - வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்


Next Story

மேலும் செய்திகள்