நடுரோட்டில் விழுந்த வரலாறு.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு

x

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சமத்துவபுரம் அருகே நெடுஞ்சாலையை ஓட்டி இருந்த பழமையான அரச மரம், நேற்று பெய்த கனமழையில், முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஆகியோர், சுமார் 3 மணி நேரம் போராடி, மரத்தை அகற்றிய பின், போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்