நெருங்கும் தீபாவளி கடைசி நேரத்தில் வியாபாரிகள் தலையில் விழுந்த பேரிடி

x

தீபாவளியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி நடந்த ஆட்டுச் சந்தையில் வியாபாரம் மந்தமாக நடைபெற்றதால் விற்பனையாளர்கள் ஏமாற்றமடைந்தனர். கடந்த ஆண்டு தீபாவளி இதே சந்தையில் சுமார் 10,000 ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு 10 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றது. ஆனால் இம்முறை குவிக்கப்பட்ட ஆடுகளை வாங்க தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் வராததால் விற்பனை மந்தமாக நடைபெற்று விவசாயிகளை ஏமாற்றம் அடையச் செய்தது.


Next Story

மேலும் செய்திகள்