திடீரென பிடிக்காமல் போன 'பிரேக்'.!கண்ணிமைக்கும் நொடியில் பறிபோன உயிர்கள்.. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

x

கிருஷ்ணகிரி மாவட்டம், குந்துக்கோட்டை அருகே சரக்கு வாகனம் பிரேக் பிடிக்காமல் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்...

தேன்கனிக்கோட்டையில் இருந்து ஹாலோ பிளாக் கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம், அஞ்செட்டி வனப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தில் பிரேக் பிடிக்காத நிலையில், தேன்கனிக்கோட்டை நோக்கி வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து மாதேஷ், அவரது மனைவி ஜெயலட்சுமி மற்றும் டெம்போ வாகனத்தின் மீது அமர்ந்திருந்த தொழிலாளி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், டெம்போ ஓட்டுநர் சுஜித் குமார் என்பவர் படுகாயமடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்