மாந்தோப்பில் சடலமாக கிடந்த சிறுவன் - பார்த்ததும் அதிர்ந்து போன மக்கள்

x

பர்கூர் அடுத்த சக்கில் நத்தம் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகன் ஹரிஷ். இவர் கப்பல்வாடியில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மோகன்ராஜ் என்பவரது மாந்தோப்பில் ஹரிஷ் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து 200க்கும் மேற்பட்டோர் குவிந்த நிலையில், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக உடலை எடுக்க விடாத நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி முரளி, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மாந்தோப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு உடலை கைப்பற்றிய பர்கூர் போலீசார் பிரதேச பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்