சிசிடிவி கேமராவில் கருப்பு ஸ்ப்ரே... நள்ளிரவில் ATM-ஐ பிளந்த கொள்ளை கும்பல் - காத்திருந்த அதிர்ச்சி

x

எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் கேமிராவில், கருப்பு ஸ்ப்ரே அடித்து, பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி - குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் நேற்று மாலை வங்கி ஊழியர்கள் 12 லட்சம் ரூபாய் நிரப்பிச் சென்றனர். இந்நிலையில், நேற்று இரவு ஏடிஎம் மையத்திற்கு வந்த மர்ம நபர்கள், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மீது கருப்பு நிற ஸ்பிரே செய்துவிட்டு, உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இன்று காலை ஏடிஎம் மையத்திற்கு வந்த பொதுமக்கள், இதுகுறித்து மகாராஜகடை போலீசாருக்கும், வங்கி நிர்வாகத்திற்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்கப்பட்ட பணம் எவ்வளவு என்பது வங்கி ஊழியர்கள் கணக்கை பார்த்த பின் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்


Next Story

மேலும் செய்திகள்