பஸ்ஸ்டாண்ட் அருகே தொழிலாளியை சுத்துப்போட்டு வெட்டிய கும்பல்... குலைநடுங்கிய கோவில்பட்டி

x

கோவில்பட்டி புது பஸ்ஸ்டாண்ட் அருகே கூலித் தொழிலாளியை சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. கோவில்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த துரை என்பவர் கல் உடைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்த வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு இந்திரா காலனியில் வைத்து துரையை சுற்றிவளைத்த ஒரு கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தது. பலத்த காயத்துடன் துரை மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளநிலையில், இதுதொடர்பாக கோவில்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்