கோவையில் ஆம்புலன்ஸ் கடத்தல்.. பார்க்கிங்கில் என்ன நடந்தது?

x

கோவை அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை திருடிச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர், நோயாளி ஒருவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து வந்துள்ளார்.

அவர் மருத்துவமனை அருகே உள்ள பார்க்கிங் பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியே சென்றுள்ளார்.

திரும்பி வந்து பார்த்தபோது ஆம்புலன்ஸ் வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால், கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி முத்து மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

மது போதையில் இருந்த இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதால், அவர்களிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்