ஊசி போட்டதும் மயங்கி விழுந்து பறிபோன உயிர் - கடைசியில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை

x

கோவை, சூலூர் அடுத்த செஞ்சேரி மலையை சேர்ந்தவர் பிரபு. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், செஞ்சேரி மலை பகுதியில் உள்ள கிளினிக்கில் சிகிச்சைக்கு சென்ற நிலையில், ஊசி செலுத்திக் கொண்டு வீடு திரும்பிய போது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் தான் இளைஞர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட கிளினிக்கில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சம்பந்தப்பட்ட கிளினிக்கை பால் ஜெயசீலன் என்பவர் நடத்தி வருவது தெரியவந்தது. பால் ஜெயசீலனின் இரு மகன்களும் ஜார்ஜியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்துள்ளனர். நாடு திரும்பிய இருவரும், இந்தியாவில் மருத்துவம் பார்ப்பதற்கான தகுதித் தேர்வை எழுதாமலையே மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதில், சம்பவத்தன்று பால் ஜெயசீலனின் மகன் விக்டர் ஜீவன் ராஜ் சிகிச்சையளித்திலே இளைஞர் உயிரிழந்தது தெரியவர அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில், தமிழ்நாடு அரசின் உரிமம் பெறாமலும் கிளினிக் செயல்பட்டு வந்தது தெரியவர அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்