கையில் எடுக்க வேண்டாமே என தொங்க விட்ட கோவை வாசிகள் - அதுவும் பயனில்லாமல் போன சோகம்

x

கையில் எடுக்க வேண்டாமே என தொங்க விட்ட கோவை வாசிகள் - அதுவும் பயனில்லாமல் போன சோகம்

கோவையில் குறிப்பிட்ட பகுதியில் சிறுநீர் கழிப்பவர்களை கண்டிக்கும் விதமாக, செருப்பு மற்றும் துடைப்பத்தை தோரணமாக தொங்கவிட்டு, குடியிருப்புவாசிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில் உள்ள சிவானந்த காலனி வள்ளலார் பகுதியில், பலர் சிறுநீர் கழிப்பதாகவும், குப்பைகளை கொட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் கடும் அவதியடைந்த அப்பகுதி குடியிருப்புவாசிகள் சிலர், சிறுநீர் கழிப்பவர்களையும், குப்பை கொட்டுபவர்களையும் கண்டிக்கும் விதமாக, செருப்பு மற்றும் துடைப்பத்தை தோரணமாக தொங்கவிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பேசிய அவர்கள், நோய்த்தொற்று அபாயம், துர்நாற்றம் ஏற்படுவதாகவும், பலமுறை சொல்லியும் யாரும் கேட்பதில்லை என்றும் தெரிவித்தனர். எனவே அவர்களை எச்சரிக்கும் விதமாகவே இவ்வாறு தோரணம் கட்டியுள்ளதாகவும், ஆனால் அதைமீறியும் தொடர்ந்து சிலர் சிறுநீர் கழித்து வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்