பாசம் காட்டுவது போல் மாணவிக்கு பாலியல் தொல்லை... பெற்றோருக்கு ஷாக் - சிக்கிய பெண் ஆசிரியை

x

பாசம் காட்டுவது போல் மாணவிக்கு பாலியல் தொல்லை.. பெற்றோருக்கு ஷாக் - சிக்கிய பெண் ஆசிரியை

கோவையில் 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி பெண் ஆசிரியை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கோவில்பாளையம் கருவலூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் உடையாம் பாளையத்தை சேர்ந்த சவுந்தர்யா என்பவர் சமூக அறிவியல் ஆசிரியையாக பணியாற்றினார். இவர் 9ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி மாணவியிடம் பாசமாக பழகுவது போல் பழகி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் ஆசிரியை சவுந்தர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்