விசிட் வந்த அதிகாரிகளிடம் புகார் வாசித்த 9 மாணவர்கள்.. 2ம் முறையாக பட்டும் திருந்தாத ஆசிரியர் கைது

x

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் நடராஜன் என்பவர் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி பள்ளியில் பாலியல் வன்கொடுமை குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, ஆசிரியர் நடராஜன் மீது 9 மாணவிகள் பாலியல் புகார் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து, அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் நடராஜன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஒருமுறை நடராஜன் போக்சோவில் கைது செய்யப்பட்டநிலையில், தற்போது 2-வது முறையாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகள் ஏற்கனவே புகாரளித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த பள்ளி தலைமை ஆசிரியை ஜமுனா, ஆசிரியைகள் சண்முக வடிவு, கீதா, சியாமளா ஆகியோருக்கும் போலீசார் சம்மன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்