விடுமுறை நாளில் இயங்கிய பள்ளி.. உடனே வந்த அதிரடி உத்தரவு - குஷியில் துள்ளிய மாணவர்கள்

x

கோவை புளியகுளம் பகுதியில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ பள்ளி, கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறையை மீறி இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. மழலையர் பள்ளி வகுப்புகளுக்கு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், மழலையர் பள்ளி குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து சென்றனர். மற்ற வகுப்பு மாணவர்கள் பள்ளி சீருடை அணிந்திருந்த நிலையில், அவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றதாக தெரிகிறது. இது மாவட்ட கல்வி அலுவலர் கவனத்திற்கு சென்ற நிலையில், பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நண்பகல் 12 மணிக்கு விடுமுறை அளிப்பதாக பள்ளி நிர்வாகம் அறிவித்த நிலையில், பெற்றோர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பியது. இதையடுத்து பெற்றோர்கள் வந்து அழைத்துச் சென்ற நிலையில், மாணவர்கள் உற்சாகத்துடன் வீடு திரும்பினர்.


Next Story

மேலும் செய்திகள்