கோவையில் கொட்டிய கனமழை.. இன்ஜினியரிங் காலேஜ் லேபுக்குள் அருவி போல கொட்டிய மழை நீர்..

x

கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரி ஆய்வகங்கள், தொழிற்கூடங்கள் மற்றும் ஆசிரியர்கள் அறைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆய்வுக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்கள் மீதும் மழை நீர் அருவி போல் கொட்டும் அளவிற்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது... மேலும் இயந்திரவியல் துறையின் ஆய்வுக்கூடங்களில் அதிக அளவில் தண்ணீர் புகுந்ததால் அதிக விலையுடைய இயந்திரங்கள் சேதம் அடைந்துள்ளன... கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் மழைநீரால் பழுதடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்