கோவையில் போனஸ் கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்

x

கோவையில், தீபாவளி போனசாக ஒரு மாத ஊதியம் வழங்கக்கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், இரண்டாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அறிவிக்கப்பட்ட ஊதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஒரு மாத ஊதியம் போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, துணை ஆணையாளர் உடனான பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், ஒரு மாத ஊதியம் போனசாக அறிவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என தூய்மை பணியாளர்கள் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்