மேட்டுப்பாளைய மலைப்பாதையில் திடீர் பரபரப்பு - வெளியான சர்ச்சை வீடியோ

x

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், மலைப்பாதை தடுப்புச்சுவரில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம்பெற்றதால் பரபரப்பு நிலவியது. கோத்தகிரி மலைப்பாதையில், சாலையோரத்தில் இருந்த தடுப்புச் சுவரில், நீட் தேர்வு தொடர்பாக மர்ம நபர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சர்ச்சைக்குரிய வாசகங்களை எழுதியுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் வாகன ஓட்டிகளிடம் விசாரணை நடத்திய போலீசார், அவற்றை அழித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்