ரயிலில் பெண்களின் ரகசிய புகைப்படம்...கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டல் - சிக்கிய வழக்கறிஞர்

x

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வந்த பாசஞ்சர் ரெயிலில் பெண்களை ரகசியமாக போட்டோ எடுத்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டள்ளார்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மணி நகரை சேர்ந்தவர் அப்துல் ரஜாக் . வழக்கறிஞரான இவர், தினமும் மெனு பாசஞ்சர் ரெயிலில் கோவையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு பயணம் செய்து வந்தார். அப்துல் ரஜாக் தினமும், தனது ரயில் பயணத்தில் பெண்களை ரகசியமாக புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரி மாணவி ஒருவரிடம் அப்துல் ரஜாக் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும், அவரை ரகசியமாக புகைப்படம் எடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் ரயில்வே காவலர்களிடம் புகார் அளித்துள்ளார். உரிய விசாரணைக்கு பின் வழக்கறிஞர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்