கோவையில் ரியாலிட்டி ஷோ நடிகருக்கு நேர்ந்த கதி.. அவரே சொல்லும் துயர கதை

x

கோவையில் ரியாலிட்டி ஷோ நடிகருக்கு நேர்ந்த கதி.. அவரே சொல்லும் துயர கதை

கோவையில் தனது ஹவுஸ் ஓனரின் உறவினர்களிடம் இருந்து, தனது உடைமைகளை மீட்க, துணை நடிகர் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக போராடி வருகிறார்.கோவை காட்டூர் பகுதியை சேர்ந்த மனோ, சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் துணை நடிகராக நடித்து வருகிறார். இவர், காளப்பன் லேஅவுட் பகுதியில், தனது தந்தையுடன் வாடகைக்கு குடியிருந்தார். இவரது வீட்டின் உரிமையாளர் ஸ்ரீதருக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. இதில், ஸ்ரீதருக்கு சொந்தமான கட்டிடத்தில் இருந்த அனைத்து பொருட்களையும் உறவினர்கள் எடுத்து சென்றனர். இதில் வீட்டில் குடியிருந்த, துணை நடிகர் மனோவின் பொருட்களும் பறிபோயின. அந்த பொருட்களை மீட்க, துணை நடிகர் மனோ, இரண்டு ஆண்டுகளாக அலைந்து வருகிறார். தற்போது, தனது பொருட்களை மீட்டு தருமாறு, கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை கொடுத்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்