கோவிலுக்கு செல்வதாக சொன்னவர்.. காருக்குள் எரிந்து கிடந்த கொடூரம்.. வெளியான பரபரப்பு காட்சி

x

கொல்லம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. காரில் சென்றவர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில், அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில், காரினுள் உயிரிழந்த நபர் கல்லுவாதுக்கல் பகுதியை சேர்ந்த ஜெய்னு என்பது தெரிய வந்தது. கோயிலுக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு காரில் சென்றுள்ள ஜெய்னு, காரை நிறுத்திவிட்டு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டதும், அவரோடு சேர்ந்து காரும் தீப்பற்றி எரிந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்