கொடநாடு வழக்கில் திடீர் அதிர்ச்சி.. சாட்சிகளுக்கு பகீர் மிரட்டல்

x

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய சாட்சியை மிரட்டிய வழக்கில் சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் வழங்கபட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு கொடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டனர். சம்பவத்தன்று இவர்கள் உதகையில் உள்ள தனியார் காட்டேஜில் தங்கியதால் அதன் உரிமையாளர் சாந்தாகுமாரி என்பவரை போலீசார் முக்கிய சாட்சியாக சேர்த்தனர். இந்தநிலையில் சாட்சி சொல்லக்கூடாது என சாந்தகுமாரியை மிரட்டியதாக அவர் போலீசில் புகாரளித்தார். இந்த வழக்கு உதகையில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும்நிலையில், சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகிய இருவருக்கும் நேரில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்