'வேட்டையன்' பார்க்க வந்த ரசிகர்களை கொதிக்க விட்ட சம்பவம்... தியேட்டரில் திடீர் பரபரப்பு

x

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள திரையரங்கில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்நிலையில் இடைவேளையின்போது திரையரங்க வளாகத்தில் விற்பனை செய்யப்பட்ட பாப்கார்ன், ஐஸ் க்ரீம், சிப்ஸ் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் காலாவதியானதாகக் கூறி, பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் நடந்தது குறித்து கேட்டறிந்து, புகார் அளிக்குமாறு கூறியபின் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்