"இ-பாஸ் எடுப்பது மிகவும்..."கொடைக்கானல் சுற்றுலாப்பயணி சொன்ன தகவல்

x

வார விடுமுறையையொட்டி, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சாரல் மழையுடன் குளுமையான சூழல் காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகை ரசித்தவாறு, குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட இடங்களுக்கு சென்றும், படகு சவாரி செய்தும், பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள லட்சக்கணக்கான மலர்களை கண்டு ரசித்தும் விடுமுறையை கொண்டாடினர். இ-பாஸ் இருப்பதால் யாரும் பயப்பட வேண்டாம் என்றும், எளிமையாக பெற்று விடுமுறையை கொண்டாட‌ வரலாம் என்றும் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்