நட்சத்திர ஏரியில் களைகட்டிய படகு போட்டி - பரிசுகளை தட்டி தூக்கிய சுற்றுலா பயணிகள்

x

கடந்த 17ம் தேதி மலர்க்கண்காட்சியுடன் தொடங்கிய கோடை விழா 10 நாட்கள் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக, சுற்றுலா துறை சார்பில் ஆண்கள் இரட்டையர் மிதிபடகு, பெண்கள் இரட்டையர் மிதிபடகு, ஆண் மற்றும் பெண் இணைந்து கலப்பினர் இரட்டை மிதி படகு என 3 பிரிவுகளாக படகு போட்டி நடைபெற்றது. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த சுற்றுலா பயணிகளுக்கு பதக்கங்களும், பரிசுகளும் சுற்றுலா துறை சார்பில் வழங்கப்பட்டது. அத்துடன் இந்த படகு போட்டியினை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்