கிளாம்பாக்கம் ரயில் நிலையம் - அமைச்சர் கொடுத்த அப்டேட்

x

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு தேவையான அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், அதுகுறித்த விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்றும், அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், 15 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் காலநிலை பூங்கா பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் தா.மோ அன்பரசன், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் ​பேசிய அமைச்சர் சேகர் பாபு, கிளம்பாக்கம் ரயில் நிலையம் தொடர்பாக உரிய அழுத்தங்களை கொடுத்து வருவதாகவும், இன்னும் 10 நாட்களில் நேரடியாக அப்பகுதியில் ஆய்வு நடைபெற உள்ளதாகவும், மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தொடர் முயற்சியாக ஆய்வு மூலமாக மேற்கொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டார். முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 150 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு வசதி செய்யப்பட உள்ளதாகவும், கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்