சென்னை வடபழனியில் அதிகாலை நடந்த பயங்கர சம்பவம்..! வெளியான பதறவைக்கும் வீடியோ காட்சி | Chennai

x

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் வட பழனியில் உள்ள பிரபல தனியார் மாலில் இயங்கி வரும் மருந்துக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல காலை நண்பர் பாஸ்கருடன் வேலைக்குச் சென்று இருக்கிறார் தினேஷ். அப்போது வடபழனி அருகே கார் மற்றும் இரு சக்கரவாகனத்தில் வந்த கும்பல் தினேஷை சரமாரியாகத் தாக்கி காரில் கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கரன் போலீசில் புகார் அளித்து இருக்கிறார். இது தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில் தினேஷ் ஆந்திராவில் சிலரிடம் கடன் வாங்கி இருந்தது தெரியவந்துள்ளது. எனவே கடன் கொடுத்தவர்கள் காரில் கடத்தி சென்று இருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தினேஷை காரில் கடத்தி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்