அரசு ஆபிசுக்குள்ளும் நுழைந்த மோகம்..வைரலான ரீல்ஸ்.. கேட்கப்பட்ட விளக்கம்

x

கேரளாவில், அரசு அலுவலகத்தில் ரீல்ஸ் எடுக்கப்பட்ட சம்பவம் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டம் திருவில்லா நகராட்சியில், அரசு ஊழியர்கள் சிலர், தங்களது பணிச்சுமையை போக்கும் வகையில், ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதுகுறித்து திருவில்லா நகராட்சி இயக்குனர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மழைக்கால சூழலில், ஞாயிற்றுக்கிழமை பணியாற்ற நேரிட்டதால், தங்க​ள் மன அழுத்தத்தை குறைக்க இதுபோன்று செய்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்