ஒரே வீட்டை நோட்டமிடும் மோப்ப நாய்கள்.. இன்ச் இன்ச்சாக சல்லடை போடும் மீட்புக்குழு | Wayanad landslide

x

கேரள மாநிலத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதியில் உள்ள ஒரு வீட்டை மோப்ப நாய் சுற்றி வலம் வந்தது. இதையடுத்து, அங்கு அங்குலம் அங்குலமாய் மீட்புக்குழுவினர் ஆய்வு செய்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினரின் நாய் இப்பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து மோப்ப நாய்கள் மற்றும் மீட்புக் குழுவினருடன், உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெறுவதாக சிறப்பு குழு அதிகாரி சமீரன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்