நடிகைகள் ரகசிய வாக்குமூலம்.. சிக்கிய முக்கிய ஆதாரம்? | Kerala Actress | Hema Committee Report

x

கேரள மாநிலத்தில், நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து புகார் எழுந்து வரும் நிலையில் நடிகை ஒருவர், நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் உட்பட7 பேர் மீது வன்கொடுமை புகார் அளித்தார். இந்த புகாரில், முகேஷ் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், எர்ணாகுளம் ஜூடிசியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் 8வது நீதிமன்றத்தில் நடிகையிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. புகாரில் உறுதியாக இருப்பதாகவும், ஆதாரங்களுடன் விரிவான வாக்குமூலத்தை அளித்துள்ளதாகவும் புகார் அளித்த நடிகை தெரிவித்துள்ளார். வரும் நாட்களில், மற்ற வழக்குகளில் புகார்தாரரின் ரகசிய அறிக்கையை விசாரணைக் குழு எடுக்க உள்ளது. முகேஷ் கைதுக்கு தற்போது தடை உத்தரவு உள்ள நிலையில், கொச்சி வந்த அவர் குற்றம் சாட்டப்பட்ட நடிகைக்கு எதிரான ஆதாரங்களை தனது வழக்கறிஞர் ஜோ பாலிடம் ஒப்படைத்தார். ஸ்கிரீன் ஷாட்கள் மற்றும் மின்னஞ்சல் ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் செப்டம்பர் 2-ல், எர்ணாகுளம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்