நாமக்கல் என்கவுன்ட்டர்... கொள்ளையர்களை அழைத்து சென்ற கேரள போலீஸ்... கிடைத்த முக்கிய பொருள்...

x

திருச்சூர் ஏ.டி.எம். கொள்ளை சம்பவத்தில், கொள்ளையரை நிகழ்விடத்திற்கு அழைத்து சென்று கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கேரள மாநிலம் கோலழி பகுதியில், கடந்த 27-ம் தேதி 3 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்த வடமாநில கும்பல், 65 லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பிச்செல்ல முயன்றது. குமாரபாளையத்தில் கொள்ளையரை தமிழக போலீசார் சுட்டுப்பிடித்த நிலையில், அதில் 4 பேரை கேரள போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கொள்ளை நிகழ்ந்த பகுதிகளுக்கு குற்றவாளிகளை அழைத்து சென்ற போலீசார், கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட கேஸ் கட்டரையும் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்