ஓவர்டேக் எடுக்கும்போது விபரீதம்.. லாரி டயரில் சிக்கிய மனைவி.. பதைபதைக்க வைக்கும் காட்சி

x

ஓவர்டேக் எடுக்கும்போது விபரீதம்.. லாரி டயரில் சிக்கிய மனைவி.. பதைபதைக்க வைக்கும் காட்சி

கேரளா மாநிலம் கொல்லம் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த கணவன், மனைவி நிலை தடுமாறி சாலையில் விழுந்தபோது பின்னால் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி மனைவி உயிரிழந்தார். கொல்லம் பறைக்காடு பகுதியை சேர்ந்த சுதீஷ் என்பவர், தனது மனைவி பிந்தியாவை பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். கொல்லம் - ஒச்சிரா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பக்கவாட்டு சாலையிலிருந்து வந்த இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது, பின்னால் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி பிந்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்