"ஆடி 18, அமாவாசை தினங்களில் பொதுமக்களுக்கு தடை.." கலெக்டர் அதிரடி உத்தரவு | Kaveri River

x

ஆடி பதினெட்டு மற்றும் ஆடி அமாவாசை தினங்களில், காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோரத்தில் படிக்கட்டுகள் இல்லாத பகுதிகளில் மக்கள் நீராட திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தடை விதித்துள்ளார். வெள்ளப்பெருக்கு காரணமாக மின்கோபுரங்கள் சாய்ந்ததால் நேப்பியர் பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட்டது. இந்நிலையில், இன்று போக்குவரத்து சீரானதை தொடர்ந்து, அப்பகுதியில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மின்கோபுரங்கள் சாய்ந்தாலும், தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், மாவட்டத்தில் 52 இடங்களில் பொதுமக்கள் ஆற்றில் இறங்காதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்