மணல் கடத்தல் லாரியை பைக்கில் விரட்டிய VAO... பார்த்த நொடி டிரைவர் செய்த காரியம்

x

கரூர் அருகே மணல் கடத்தல் லாரியை பைக்கில் விரட்டிச் சென்று, கிராம நிர்வாக அலுவலர் மடக்கிப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பாணியில் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று லாரியை அவர் மடக்கியுள்ளார். சுதாரித்துக் கொண்ட லாரி ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். மணல் லாரியை பறிமுதல் செய்த போலீசார், கிராம நிர்வாக அலுவலர் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்