மனைவியை அழைக்க வந்த கணவனுக்கு பிடித்த வெறி... பஸ் ஸ்டாப்பிலேயே ரத்த வெள்ளத்தில் கொலை
கரூரில் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியின் உறவுக்கார இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் ராயனூர் தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் வீரமலை. இவருக்கும் இவரது மனைவி புனிதாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், புனிதாவை வீட்டுக்கு அழைத்துச் செல்ல அவரது தம்பி புவின் மற்றும் ஒன்றுவிட்ட சகோதரர் கபில்தேவ் வந்துள்ளனர். பேருந்து நிறுத்தத்தில் அவர்களுக்கும் வீரமலைக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கபில்தேவை கத்தியால் குத்திவிட்டு வீரமலை தப்பியோடியுள்ளார். படுகாயமடைந்த கபில்தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தலைமறைவான வீரமலையை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story