கண்ணீர்விட்டு கதறிய கல்லூரி மாணவன்.. தாய்மை உள்ளத்தோடு பெண் SI செய்த செயல்

x

கர்நாடகாவில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட இளைஞர் தன்னிடம் கல்லூரி கட்டணம் மட்டுமே இருப்பதாக கூறி அழுததால், அவருக்கு ஆறுதல் கூறிய பெண் காவலர், அபராத தொகையை தானே செலுத்திய நிகழ்வு அரங்கேறியுள்ளது...

பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள இல்கல் பகுதியில் பெண் காவல் உதவி ஆய்வாளர் எஸ்.ஆர்.நாயக் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியில் இருசக்கர வானத்தில் மூன்று பேர் வந்ததால், அவர்களை மடக்கி பிடித்த பெண் காவலர், அபராதம் விதித்தார். இந்நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர் தன்னிடம் கல்லூரி கட்டணத்திற்கான பணம் மட்டுமே இருப்பதாகவும், அபராதம் செலுத்த பணம் இல்லையெனவும் கூறி அழுதுள்ளார். இதைக் கண்டு மனம் இரங்கிய பெண் காவலர், இளைஞரை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறி, அவரின் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு, இனி வரும் காலங்களில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடக் கூடாது என அறிவுரை வழங்கினார். மேலும், அபராத தொகையை தனது சொந்த பணத்தில் இருந்தே காவலர் செலுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்