கர்நாடகாவில் உயிரிழந்த தமிழர் குடும்பத்திற்க்குமுதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு | Karnataka

x

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹென்னூரில் பெய்த கன மழையின் காரணமாக கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் கூறியதோடு, நிதி உதவி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து கட்டுமானப் பணிக்காக சென்றிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சத்தியராஜ் ஆகிய இருவரும் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க, அவர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்