அனாமத்தாக கைமாறிய ரூ.40 லட்சம் வீடு.. நடுரோட்டில் தாயும் மகளும்.. 6 நாளா ஒரே துணி..

x

காரைக்குடியில் கந்து வட்டி கடனுக்காக வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை அள்ளி சென்ற சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியது.

காரைக்குடி கீழஊரணியை சேர்ந்தவர் வாசுகி. இவர், தேவகோட்டை காச்சாக்குடியை சேர்ந்த கணேசன் என்பவரிடம் வீட்டை அடமானமாக வைத்து 2 ஆண்டுக்கு முன்பு 9 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கியுள்ளார். ஆனால், அடமான பத்திரம் என்று கூறி பவர் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாகவும், அதை வைத்து, வீட்டை வேறு ஒருவருக்கு 40 லட்சம் ரூபாய்க்கு கணேசன் விற்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 24 ம் தேதி வாசுகி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற நிலையில், அடியாட்களுடன் சென்ற கணேசன், வீட்டில் இருந்த பொருட்களை அனைத்தையும் அள்ளிச் சென்றுள்ளார். இதனால், வாசுகி தனது மகளுடன் 6 நாட்களாக ஒரே துணியை உடுத்திக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். புகார் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், கணேசனின் சித்தி வீட்டில் இருந்த பொருட்களை மீட்டுச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்